எத்தனையோ பதிவுகள் எழுதனும்னு நெனச்சு நேரம் இல்லாமையால் தள்ளி கொண்டே போகுது.
இது ரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தது.இன்னிக்கு எழுதியே ஆகணும்னு முடிவு பண்ணியாச்சு.
ஒரு நாள் நான் எப்பொழுதும் புத்தகம் வாங்கற கடைக்கு போய் இருந்தேன்.புத்தகங்களை அலசி கொண்டு இருந்த போது என்னருகே இருந்தவர் தீடிர்னு மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.நானும் மற்றவர்களும் அவருக்கு முகத்தில் தண்ணீர் அடித்து மயக்கம் தெளிய வைத்தோம்.ஒரு 40 வயது இருக்கும் அவருக்கு.Sales Rep ஆக இருந்தவராம்.ஒரு விபத்துக்கு பிறகு சொந்தமாக சிறுதொழில் செய்வதாக சொன்னார்.
அவர் விபத்துக்கான காரணமே இந்த பதிவு எழுத தூண்டியது.சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தெருவில் கிடந்த திர்ஷ்டி பூசனிக்காய் மேல் வண்டி ஏறி இவரும் வண்டியும் கீழ விழுந்ததில் அவருக்கு முதுகெலும்பில் பலத்த அடியாம்.டிஸ்க் ஏதோ இடம் நகர்ந்து விட்டதாம்.மருத்துவர்களால் ஓரளவுக்கு தான் சரி செய்ய முடிந்தது போக இப்பொழுது கைத்தடி வைத்து கொண்டு நடக்கிறார்(காலில் fracture வேறு).இப்படி தான் அடிக்கடி மயக்கம் வருமாம்.
பொதுவாக இந்த மக்களுக்கு அமாவாசை,ஆயுது பூஜை போன்ற நாட்கள் என்றல் அந்த பூசனிக்காய் உடைத்தால் தான் திருப்தி ஆகிறது.நான் அவங்க நம்பிக்கையை குறை கூற வில்லை.தாராளமா உடைங்க பா .ஆனா அத ரோடோராம உடைங்க .இல்ல உடைச்சிட்டு அத ஓரமா நகர்தியாவது போடுங்க.நடுரோட்டுல போடு இருக்கும் மனுஷங்களா இம்சை படுத்தாதீங்க.இதனால உங்க திர்ஷ்டி போகுதோ இல்லையோ என்ன மாதிரி நெறைய பேரு கிட்ட வாங்கி கடிக்காம இருப்பீங்க.
நாங்க முன்ன இருந்த அபார்ட்மென்ட் அருகே ஒரு குடும்பம் இருந்தது.அவர்கள் வீட்டில் ஒரு குழந்தை உண்டு.ஒவ்வொரு வெள்ளிகிழமையும் மறக்காம அந்த குழந்தைக்கு சூடம் ஏத்தி திர்ஷ்டி சுத்துவாங்க.நல்லது.ஆனா அத கரெக்டா எங்க வீடு வாசலுக்கு நேர தான் கொண்டு வந்து வைப்பாங்க (எங்க வீட்டு வாசலும்,அவங்க வாசலும் அருகருகே ).பல நாள் பொறுத்து பார்த்து ஒரு நாள் கத்தி விட்டேன்.
இந்த மாதிரி மக்கள் தங்கள் நம்பிக்கைகளை மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.
இது ரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தது.இன்னிக்கு எழுதியே ஆகணும்னு முடிவு பண்ணியாச்சு.
ஒரு நாள் நான் எப்பொழுதும் புத்தகம் வாங்கற கடைக்கு போய் இருந்தேன்.புத்தகங்களை அலசி கொண்டு இருந்த போது என்னருகே இருந்தவர் தீடிர்னு மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.நானும் மற்றவர்களும் அவருக்கு முகத்தில் தண்ணீர் அடித்து மயக்கம் தெளிய வைத்தோம்.ஒரு 40 வயது இருக்கும் அவருக்கு.Sales Rep ஆக இருந்தவராம்.ஒரு விபத்துக்கு பிறகு சொந்தமாக சிறுதொழில் செய்வதாக சொன்னார்.
அவர் விபத்துக்கான காரணமே இந்த பதிவு எழுத தூண்டியது.சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தெருவில் கிடந்த திர்ஷ்டி பூசனிக்காய் மேல் வண்டி ஏறி இவரும் வண்டியும் கீழ விழுந்ததில் அவருக்கு முதுகெலும்பில் பலத்த அடியாம்.டிஸ்க் ஏதோ இடம் நகர்ந்து விட்டதாம்.மருத்துவர்களால் ஓரளவுக்கு தான் சரி செய்ய முடிந்தது போக இப்பொழுது கைத்தடி வைத்து கொண்டு நடக்கிறார்(காலில் fracture வேறு).இப்படி தான் அடிக்கடி மயக்கம் வருமாம்.
பொதுவாக இந்த மக்களுக்கு அமாவாசை,ஆயுது பூஜை போன்ற நாட்கள் என்றல் அந்த பூசனிக்காய் உடைத்தால் தான் திருப்தி ஆகிறது.நான் அவங்க நம்பிக்கையை குறை கூற வில்லை.தாராளமா உடைங்க பா .ஆனா அத ரோடோராம உடைங்க .இல்ல உடைச்சிட்டு அத ஓரமா நகர்தியாவது போடுங்க.நடுரோட்டுல போடு இருக்கும் மனுஷங்களா இம்சை படுத்தாதீங்க.இதனால உங்க திர்ஷ்டி போகுதோ இல்லையோ என்ன மாதிரி நெறைய பேரு கிட்ட வாங்கி கடிக்காம இருப்பீங்க.
நாங்க முன்ன இருந்த அபார்ட்மென்ட் அருகே ஒரு குடும்பம் இருந்தது.அவர்கள் வீட்டில் ஒரு குழந்தை உண்டு.ஒவ்வொரு வெள்ளிகிழமையும் மறக்காம அந்த குழந்தைக்கு சூடம் ஏத்தி திர்ஷ்டி சுத்துவாங்க.நல்லது.ஆனா அத கரெக்டா எங்க வீடு வாசலுக்கு நேர தான் கொண்டு வந்து வைப்பாங்க (எங்க வீட்டு வாசலும்,அவங்க வாசலும் அருகருகே ).பல நாள் பொறுத்து பார்த்து ஒரு நாள் கத்தி விட்டேன்.
இந்த மாதிரி மக்கள் தங்கள் நம்பிக்கைகளை மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.