சமீபத்தில் என் இரண்டரை வயது மகனை பள்ளியில் சேர்பதற்காக அருகே உள்ள பள்ளியை பார்க்க சென்று இருந்தேன்.
சுமாராக இருந்தது பள்ளிக்கூடம்.பள்ளியின் தலைமை ஆசிரியை எனிடம் பள்ளியை சுற்றி காண்பித்தார்.PKG அறை பற்றி மிக பெருமையாக சொன்னார்.முழுவதும் AC செய்யபட்டுள்ளது என்று.Generator இல்லாத பட்சத்தில் AC வைத்து கொண்டு என்ன செய்ய போவதாக உத்தேசமோ தெரியவில்லை.
AC இருப்பதால் அறை முழுவதும் அடைத்து போஸ்டர் ஒட்டி இருகிறார்கள் வேறு,கொஞ்சம் கூட வெளிச்சம் இல்லாமல்.
அடுத்து பாடம் பற்றிய பேச்சு வந்த போது CBSE syllabus அதனால் நான்கு புத்தகம் என்றார்கள்.பென்சில் கூட பிடிக்க தெரியாத குழந்தைக்கு நான்கு புத்தகமா?.எல்லாவற்றையும் இரண்டு வயதிலே கற்று கொண்டால் அடுத்த அடுத்த வருடத்தில் என்ன செய்ய போகிறார்கள் என்று என்னக்கு புரிய வில்லை.கடைசியாக ஒரு குண்டை தூக்கி போட்டார்கள்.வெறும் 25000 கட்டினால் போதுமாம்.அட கொடுமையே .இப்பொழுது சென்னையில் இரண்டு பிசினஸ் கோடி கட்டி பறக்கிறது.ஒன்று ரியல் எஸ்டேட் ,மற்றொன்று பள்ளிக்கூடம் ஆரம்பிபத்து.இப்பொழுதெல்லாம் பள்ளி கட்டணம் ஆரம்பமே 25 அல்லது 30 ஆயிரம் என்கிறார்கள். எனக்கு தெரிந்து வெறும் LKG கு 60 முதல் 70 ஆயிரம் வாங்கும் பள்ளிகள் கூட இருக்கின்றன.கல்வி ஒரு வியாபாரம் ஆகிவிட்டது என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டகின்றது.
தரமான பள்ளிகளை தேடி அலையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.
No comments:
Post a Comment