Tuesday, 31 July 2012

Tshirt வாசகங்கள்

சமீப காலமாக வாசகங்கள் உள்ள tshirts  அணிவது ஒரு கலாச்சாரமாகவே மாறி விட்டது.சிலது எல்லை மீறி போனாலும் நான் கண்ட சில நல வாசகங்ககள்.

   If you have a single child
You are a MOM
if you have two childs
You are a REFREE

--------------------------

I was born Intelligent but education spoiled me

-------------------------

I am one of those bad things happen to good people.

--------------------------

Out of my mind,back in five minutes

--------------------------

I am not a complete Idiot-some parts are missing.

--------------------------

Do not disturb me - I am disturbed already

----------------------

Oh Crap!You are trying to cheer me up,arent you



Thursday, 26 July 2012

என்னை பாதித்தவை

கடந்த இரண்டு வாரங்களாக மனம் அமைதியாகவே இல்லை.என் வாழ்வில் என்னை மிகவும் பாதித்த சம்பவம் என்றே சொல்லலாம்.என் மாமனார் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த பொது இறந்து விட்டார்.ஏற்கனவே ILD (Interstital Lung disease ) எனப்படும் நோயாள பாதிக்க பட்டிருந்த அவர் ஒரு மாலை பொழுதில் மாரடைப்பால் இறந்து விட்டார்.இன்னமும் எங்களால் அதில் இருந்து மீண்டு வர இயலவில்லை.ஊரில் இருந்து அனைத்து சடங்குகளும் முடித்து விட்டு வந்தோம்.
அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்கு முன்பே நேற்று எங்கள் பகுதியில் மற்றுமொரு துயர சம்பவம்.எங்கள் பகுதியில்  மிகவும் புகழ்பெற்ற அந்த பள்ளியின் பேருந்தில் இருந்த ஒரு ஓட்டையில் வழியாக விழுந்து ஸ்ருதி என்ற அந்த சிறுமி இறந்து விட்டாள்.பொதுவாகவே எங்கள் பகுதியில் நெறைய பாக்டரி galum ,பள்ளிகளும் உள்ளதால் மாலை மற்றும் இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு நெரிசல் இருக்கும் .அதற்கு முக்கிய காரணம் ரோடு அகலமாக இல்லாததாலும் சரியாக இல்லாததும்.
அது மட்டுமில்லாமல் பள்ளி பேருந்துகள் ஒரு குறிபிட்ட வேகத்திற்கு மேல் செல்ல கூடாது,பள்ளி பேருந்தை கடக்கும் மற்ற வாகனங்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் (குழந்தைகள் பஸ் ய் விட்டு இறங்குவது தெரியாமல் overtake செய்யும்   வாகனகள்) ,பேருந்தில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் seat பெல்ட் அவசியம்,பேருந்து நல்ல  நிலையில் இருத்தல் ,பேருந்தினுள் டிரைவர் அல்லாத வேறு ஒருவர் குழந்தைகளை பார்த்து கொள்ள இருத்தல்,அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஒரே வண்டியில் ஏற்றி செல்லுதல் போன்றவை அரசாங்கத்தின் சட்ட திட்டங்களாக ஒவ்வொரு பள்ளிக்கும் சொல்ல படு அவை நடைமுறை படுத்த பட வேண்டும்.
இன்றைய செய்திகளில் இன்றே அனைத்து பள்ளிகளின் பேருந்துகளும் சோதனை செய்யப்படும் என்று அறிவித்தார்கள்.ஐயா,போன மாதம் இப்படி தான் மகி என்ற சிறுமி குழியில் விழுந்த வுடன் அனைத்து தெருக்களில் உள்ள குழிகளும் மூடப்படும் அல்லது எச்சரிக்கை பலகை வைக்க படும் நு சொன்னிங்க ,இப்படி  எதாவது விபத்து ஏற்பட்ட தான் புத்தி வருமா,இந்த மாதிரி உயிர் பலிகள் தொடரத்தான் வேணுமா?

என் மாமனார் மற்றும் ஸ்ருதி யின் ஆத்மா சாந்தி அடைய என்னுடைய பிராத்தனைகள்.

Wednesday, 4 July 2012

குழந்தைகளை காப்போம்

சமீபத்தில் பல்லாவரத்தில் ஒரு தனியார் பள்ளியில் மூன்று வயது சிறுமி வாழைபழம் சாப்பிடும் பொது தொண்டையில் சிக்கி இறந்து போனாள்.நேற்று இது பத்தி என் பையன் பள்ளியில் மற்ற பெற்றோருடன் பேசி கொண்டு இருந்தேன்.அப்பொழுது சொல்லி வாய்த்த மாதிரி  எல்லா பெற்றோரும் கூறியது என் பிள்ளைக்கு நான் பொறுமையாக சாப்பிட  சொல்லி கொடுத்துள்ளேன்,பள்ளியில் ஆயா பார்த்து கொள்வார்கள்  என்று தான் கூறினார்கள்.எந்த தான் ப்ரௌமையாக சபிடலும் நமக்கே சில சமயம் தொண்டையில் மாட்டும் பொது இரண்டு ,மூன்று வயது குழந்தைக்கு என்ன தெரியும்.என் பையன் பள்ளியில் தெனமும் என்ன சாப்பாடு கொடுத்து அனுப்பனும் என்று அட்டவணை போடு கொடுத்துள்ளர்கள்.அதில் வாழைபழம்,சப்பாத்தி ,பிரட்  போன்றவையும் அடக்கம்.

இதோ இன்றைக்கு ஹைதராபாத் இல் daycare இல் விட பட்ட குழந்தை சாப்பிடும் போது வாயில் சப்பாத்தி அகப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து இருக்கிறது.இது போல சிறு குழந்தைகளை வைத்து பள்ளி நடத்துபவர்களுக்கு முறையாக நமது அரசாங்கம் முதல் உதவி பற்றி பயிற்சி அளிக்க  வேண்டும்.ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் மருத்துவர் வரும் வரையில் காத்திருக்காமல் அவர்களுக்கு முதல் உதவி அளிக்க  தெரிந்து இருக்க வேண்டும்.அரசாங்கம் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கும் முன்பே ஆசிரியர்கள் முறையாக பயிற்சி பெற்று இருக்கிறர்களா  ,பள்ளிக்கூடம் பாதுகாப்பாக,காற்றோட்டமாக,வெள்ளிச்சம் ஆக இருக்கிறதா,சுகாதரம இருக்கிறதா போன்றவற்றை சோதித்த பிறகே அனுமதி அள்ளிக்க வேண்டும்.பெற்றோரும் பள்ளியில் சேர்க்கும் முன்பு இதை எல்லாம் பரிசோதித்தே பிள்ளைகளை சேர்க்க வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைக்கு இது போன்ற உணவுகள் கொடுக்கும் போது அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொடுத்து அனுப்ப வேண்டும்.நடந்து முடிந்த பின் மற்றவர்களை குறை கூருவதுற்கு பதில் நாமே எச்சரிகையாக இருந்து கொள்ள வேண்டியது தான்.

இதோ குழந்தைக்கு சாப்பாடு தொண்டையில் அகப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டால் நாம் செய வேண்டிய முதல் உதவி பற்றி ஒரு விளக்க காட்சி.
     

Monday, 2 July 2012

மறந்தவையும் மறைந்தவையும்



நாம் சிறு வயதில் அனுபவித்த எத்தனையோ விஷயங்களை நம் குழந்தைகளால் அனுபவிக்க முடியவில்லை.இன்றைய குழந்தைகளுக்கு தொலைகாட்சி பார்க்கவும்,வீடியோ கேம்ஸ் விளையாடுவுமே பிடிக்கிறது.எங்கள் தெருவில் நெறைய குழந்தைகள் உள்ளார்கள்,அனால் ஒருவரை கூட வெளியே பார்க்க முடியாது.என் பள்ளி நாட்களில் நண்பர்களோடு தெருவில் கிரிக்கெட்,பட்டம் என்று நேரம் போவதே தெரியாமல் விளையாடி இருக்கிறேன்.என் அம்மா நேரம் ஆகிட்டது என்று கூறிய பிறகே மனமே இல்லாமல் வீடு திரும்புவேன்.சனி ,ஞாயிறுகளில் தெருவே கதி என்று கிடப்போம்.நாம் மறந்து போன சில விளைய்டுகளை பற்றி இங்கே பார்போம்.
பட்டம்
பழைய செய்தித்தாளோ  அல்லது கலர் காகிதமோ அதனை அழகாக வெட்டி ,நீண்ட வால் சேர்த்து ,அழகாக சூத்திரம் அமைத்து ,உறுதியான நூல் கட்டி நண்பர்களோடு போட்டி போட்டு கொண்டு மொட்டைமாடியிலோ அலது ஆதங்கரையிலோ பட்டம் விடும் அழகே தனி.சிலர் அதில் கண்ணாடி துகள்களை நொறுக்கு போட்டு மாஞ்ச தடவி விடுவர்.பட்டம் உயர பரக்க பரக்க நண்பர்களுக்குள் போட்டி நடக்கும்.யார் பட்டம் உயரே போகிறது என்று.வெறும் படத்தின் வாலில் தான் எதனை வகை.நீண்ட ஒற்றை வால்,மூணு நாலு வால்கள் ஒன்றாக சேர்த்து இணைத்து விடுவது,வலயங்கள் செய்து அதனை ஒன்றாக இணைத்து விடுவது அன்று.
பொங்கல் சமயத்தில் வரும் கரிநாள் (எ) காணும் பொங்கலில் ஆற்றங்கரையில் பெரியவர்கள் கும்மி,கபடி போன்ற விளையாட்டுகளில் எடுபட சிறுவர்கள் பட்டம் விடு கொண்டு இருப்பர்.