Monday, 2 July 2012

மறந்தவையும் மறைந்தவையும்



நாம் சிறு வயதில் அனுபவித்த எத்தனையோ விஷயங்களை நம் குழந்தைகளால் அனுபவிக்க முடியவில்லை.இன்றைய குழந்தைகளுக்கு தொலைகாட்சி பார்க்கவும்,வீடியோ கேம்ஸ் விளையாடுவுமே பிடிக்கிறது.எங்கள் தெருவில் நெறைய குழந்தைகள் உள்ளார்கள்,அனால் ஒருவரை கூட வெளியே பார்க்க முடியாது.என் பள்ளி நாட்களில் நண்பர்களோடு தெருவில் கிரிக்கெட்,பட்டம் என்று நேரம் போவதே தெரியாமல் விளையாடி இருக்கிறேன்.என் அம்மா நேரம் ஆகிட்டது என்று கூறிய பிறகே மனமே இல்லாமல் வீடு திரும்புவேன்.சனி ,ஞாயிறுகளில் தெருவே கதி என்று கிடப்போம்.நாம் மறந்து போன சில விளைய்டுகளை பற்றி இங்கே பார்போம்.
பட்டம்
பழைய செய்தித்தாளோ  அல்லது கலர் காகிதமோ அதனை அழகாக வெட்டி ,நீண்ட வால் சேர்த்து ,அழகாக சூத்திரம் அமைத்து ,உறுதியான நூல் கட்டி நண்பர்களோடு போட்டி போட்டு கொண்டு மொட்டைமாடியிலோ அலது ஆதங்கரையிலோ பட்டம் விடும் அழகே தனி.சிலர் அதில் கண்ணாடி துகள்களை நொறுக்கு போட்டு மாஞ்ச தடவி விடுவர்.பட்டம் உயர பரக்க பரக்க நண்பர்களுக்குள் போட்டி நடக்கும்.யார் பட்டம் உயரே போகிறது என்று.வெறும் படத்தின் வாலில் தான் எதனை வகை.நீண்ட ஒற்றை வால்,மூணு நாலு வால்கள் ஒன்றாக சேர்த்து இணைத்து விடுவது,வலயங்கள் செய்து அதனை ஒன்றாக இணைத்து விடுவது அன்று.
பொங்கல் சமயத்தில் வரும் கரிநாள் (எ) காணும் பொங்கலில் ஆற்றங்கரையில் பெரியவர்கள் கும்மி,கபடி போன்ற விளையாட்டுகளில் எடுபட சிறுவர்கள் பட்டம் விடு கொண்டு இருப்பர்.


 

No comments:

Post a Comment