Wednesday, 4 July 2012

குழந்தைகளை காப்போம்

சமீபத்தில் பல்லாவரத்தில் ஒரு தனியார் பள்ளியில் மூன்று வயது சிறுமி வாழைபழம் சாப்பிடும் பொது தொண்டையில் சிக்கி இறந்து போனாள்.நேற்று இது பத்தி என் பையன் பள்ளியில் மற்ற பெற்றோருடன் பேசி கொண்டு இருந்தேன்.அப்பொழுது சொல்லி வாய்த்த மாதிரி  எல்லா பெற்றோரும் கூறியது என் பிள்ளைக்கு நான் பொறுமையாக சாப்பிட  சொல்லி கொடுத்துள்ளேன்,பள்ளியில் ஆயா பார்த்து கொள்வார்கள்  என்று தான் கூறினார்கள்.எந்த தான் ப்ரௌமையாக சபிடலும் நமக்கே சில சமயம் தொண்டையில் மாட்டும் பொது இரண்டு ,மூன்று வயது குழந்தைக்கு என்ன தெரியும்.என் பையன் பள்ளியில் தெனமும் என்ன சாப்பாடு கொடுத்து அனுப்பனும் என்று அட்டவணை போடு கொடுத்துள்ளர்கள்.அதில் வாழைபழம்,சப்பாத்தி ,பிரட்  போன்றவையும் அடக்கம்.

இதோ இன்றைக்கு ஹைதராபாத் இல் daycare இல் விட பட்ட குழந்தை சாப்பிடும் போது வாயில் சப்பாத்தி அகப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து இருக்கிறது.இது போல சிறு குழந்தைகளை வைத்து பள்ளி நடத்துபவர்களுக்கு முறையாக நமது அரசாங்கம் முதல் உதவி பற்றி பயிற்சி அளிக்க  வேண்டும்.ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் மருத்துவர் வரும் வரையில் காத்திருக்காமல் அவர்களுக்கு முதல் உதவி அளிக்க  தெரிந்து இருக்க வேண்டும்.அரசாங்கம் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கும் முன்பே ஆசிரியர்கள் முறையாக பயிற்சி பெற்று இருக்கிறர்களா  ,பள்ளிக்கூடம் பாதுகாப்பாக,காற்றோட்டமாக,வெள்ளிச்சம் ஆக இருக்கிறதா,சுகாதரம இருக்கிறதா போன்றவற்றை சோதித்த பிறகே அனுமதி அள்ளிக்க வேண்டும்.பெற்றோரும் பள்ளியில் சேர்க்கும் முன்பு இதை எல்லாம் பரிசோதித்தே பிள்ளைகளை சேர்க்க வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைக்கு இது போன்ற உணவுகள் கொடுக்கும் போது அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொடுத்து அனுப்ப வேண்டும்.நடந்து முடிந்த பின் மற்றவர்களை குறை கூருவதுற்கு பதில் நாமே எச்சரிகையாக இருந்து கொள்ள வேண்டியது தான்.

இதோ குழந்தைக்கு சாப்பாடு தொண்டையில் அகப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டால் நாம் செய வேண்டிய முதல் உதவி பற்றி ஒரு விளக்க காட்சி.
     

No comments:

Post a Comment